ADDED : அக் 09, 2025 11:26 PM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில் நலத்திட்ட உதவிக்கான ஆணையை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பயனாளிகளுக்கு வழங்கினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.
பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணையை, பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பங்கேற்ற னர்.


