ADDED : பிப் 12, 2024 06:29 AM

புதுச்சேரி : புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் கடந்த 9ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை, மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று இறந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.
இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


