Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி

ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி

ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி

ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி

ADDED : அக் 22, 2025 04:52 AM


Google News
புதுச்சேரி: ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் செய்து பெண் ஒருவர் மோசடி கும்பலிடம் ரூ. 1.84 லட்சம் இழந்துள்ளார்.

புதுச்சேரி, ஒயிட் டவுனையை சேர்ந்த பெண், ஆன்லைனில் வந்த கிவா நிறுவனத்தின் வெள்ளி வளையல் தயாரிப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, வளையல்களை ஆர்டர் செய்தார்.

இதையடுத்து, பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஆர்டர் செய்த வளையல்களுக்கு முன் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, இரண்டு தவணைகளாக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 664 ரூபாய் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஆர்டர் செய்த வெள்ளி வளையல் பார்சல் ஏதுவும் பெண்ணிற்கு வரவில்லை. மேலும், அந்த மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், திருபுவனையை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, துணி ஆர்டர் செய்து 4 ஆயிரத்து 697, காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் 25 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 361 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us