ADDED : மார் 20, 2025 04:45 AM
நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல், 54; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று காலை புதுச்சேரி மடுகரையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கடை வீதியில் மயங்கி கிடந்தார்.
தகவலறிந்த உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது மனைவி அங்காளம்மாள் கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.