Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி வெற்றி

புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி வெற்றி

புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி வெற்றி

புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி வெற்றி

ADDED : செப் 18, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய ஜெய்ப்பூர் அணி 45-41 என, பெங்கால் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

லீக் போட்டியில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் மோதின. பெங்கால் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 24-18 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட பெங்கால் அணிக்கு 22 புள்ளி கிடைத்தது. ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 45-41 என்ற கணக்கில் 4வது வெற்றியை பதிவு செய்தது.

ஜெய்ப்பூர் அணிக்கு நிதின் குமார் (13 புள்ளி) கைகொடுத்தார். பெங்கால் சார்பில் கேப்டன் தேவங்க் 16 புள்ளி பெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us