தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ தெற்காசிய தடகளம்: இந்தியா விலகல்

தெற்காசிய தடகளம்: இந்தியா விலகல்

தெற்காசிய தடகளம்: இந்தியா விலகல்


ADDED : பிப் 24, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாகிஸ்தானில் நடந்த தெற்காசி தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து கடைசி நேரத்தில் விலகியது இந்தியா.

தெற்காசிய தடகள கூட்டமைப்பு சார்பில், பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டில் முதன் முறையாக 'கிராஸ்-கன்ட்ரி' சாம்பியன்ஷிப் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகின.

கடந்த 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பின், இந்திய விளையாட்டு அணிகள், பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வருகின்றன. தற்போது நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது.

இந்த வரிசையில் தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்திய அணி, பாதுகாப்பு காரண்ங்களுக்காக கடைசி நேரத்தில் விலகியது. இதேபோல, பூடானும் போட்டியில் இருந்து வெளியேறியது. இதற்கான காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாகிஸ்தானுடன், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு நாடுகள் பங்கேற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us