Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின் கம்பத்தை மாற்ற லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

மின் கம்பத்தை மாற்ற லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

மின் கம்பத்தை மாற்ற லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

மின் கம்பத்தை மாற்ற லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

ADDED : ஜூலை 24, 2024 10:58 PM


Google News
செங்கல்பட்டு:மின் கம்பம் மாற்ற லஞ்சம் வாங்கிய வழக்கில், மின் வாரிய உதவி பொறியாளருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில், மின் கம்பத்தை மாற்றக்கோரி, அவரிடம் பணிபுரிந்த அன்பழகன் என்பவர், கடந்த 2020ல் மறைமலை நகர் மின்வாரிய அலுவல உதவி பொறியாளர் நடராஜன், 57, என்பவரிடம் மனு அளித்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட நடராஜன், மின்கம்பத்தை மாற்றித்தர, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பழகன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பின், அன்பழகனிடம் கொடுத்து அனுப்பிய, ரசாயனம் தடவிய 20,000 ரூபாயை, நடராஜன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார், நடராஜனை கைது செய்து, அதே ஆண்டு ஏப்., 23ம் தேதி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன் நடந்தது.

நேற்று நடந்த விசாரணையில், நடராஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீப்பளித்தார். தற்போது, நடராஜன் அம்பத்துார் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us