Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாலை நேரத்தில் செயல்படும் தற்காலிக கடைகளால் இடையூறு

மாலை நேரத்தில் செயல்படும் தற்காலிக கடைகளால் இடையூறு

மாலை நேரத்தில் செயல்படும் தற்காலிக கடைகளால் இடையூறு

மாலை நேரத்தில் செயல்படும் தற்காலிக கடைகளால் இடையூறு

ADDED : ஜூன் 28, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, பிள்ளையார் கோவில் அருகே பேருந்து நிறுத்த நிழற்குடைஉள்ளது.

இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தோர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கண்ட பேருந்து நிறுத்த நிழற்குடை எதிரே, மாலை நேரத்தில் மட்டும் தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகளை அகற்ற வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us