/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பிராட்வே, தி.நகரில் இருந்து மாமல்லைக்கு பஸ் இயங்குமா? பிராட்வே, தி.நகரில் இருந்து மாமல்லைக்கு பஸ் இயங்குமா?
பிராட்வே, தி.நகரில் இருந்து மாமல்லைக்கு பஸ் இயங்குமா?
பிராட்வே, தி.நகரில் இருந்து மாமல்லைக்கு பஸ் இயங்குமா?
பிராட்வே, தி.நகரில் இருந்து மாமல்லைக்கு பஸ் இயங்குமா?
ADDED : ஜூலை 13, 2024 12:33 AM
மாமல்லபுரம்:சென்னை மாநகரபோக்குவரத்துக் கழக பேருந்தின் இயக்க தொலைவு, 15 ஆண்டு களுக்கு முன், 35 கி.மீ., என இருந்தது. இத்தொலைவு, கடந்த 2008ல் 50 கி.மீ.,க்குநீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, அதே ஆண்டில், மாநகர பேருந்துகள் மாமல்லபுரத்திற்கு இயக்கப்பட்டன. சென்னை அடையாறிலிருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியில், தடம் எண். 588 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டது.
அதேபோல், பழைய மாமல்லபுரம் சாலை வழியில், தடம் எண். 568; தியாகராய நகரிலிருந்து, தடம் எண். 599; வேளச்சேரியிலிருந்து, தடம் எண். 589; தாம்பரத்திலிருந்து, தடம் எண். 515 ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த பேருந்துகளில் மாமல்லபுரம் பயணியர், கல்வி, பணி, பிற தேவைகள் என, சென்னை சென்று திரும்ப, அவை பயன்பட்டன. சுற்றுலா பயணியர் பயனடைந்தனர். துவக்கத்தில் முறையாக இயங்கின. நாளடைவில் குளறு படிகள் ஏற்பட்டன.
ஒரே நேரத்தில், ஒன்றன் பின் ஒன்றாக பல பேருந்துகள் இயக்கப்பட்டதால், நீண்ட நேரம் பேருந்து இன்றி பயணியர் அவதிப்பட்டனர். பேருந்துஇயக்கத்தை முறைப் படுத்த வேண்டிய நிர்வாகம், தி.நகர், அடையாறு, வேளச்சேரி பேருந்துகளை, சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியது.
திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே,மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் இயங்காமல், நீண்டநேர இடைவெளியில் ஒரு பேருந்து இயக்கப்படுகின்றன.
மாமல்லபுரத்தில் இருந்து தி.நகர், அடையாறு, பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு செல்ல, திருவான்மியூருக்கு செல்கின்றனர். அங்கு, நீண்டநேரம் காத்திருந்து, வேறு பேருந்தில் கூடுதல் கட்டணத்தில் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது. போக்குவரத்துக் கழகம், தி.நகர், பிராட்வே என, முக்கிய பகுதிகளிலிருந்து, மாமல்லபுரத்திற்கு நேரடி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.