ADDED : ஜூலை 24, 2024 07:58 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு, 37. மீனவர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, மைத்துனர் தினேஷிற்கு சொந்தமான பைபர் படகில், தினேஷ், கதிரவன் ஆகியோருடன், மீன் பிடிக்க சென்றார்.
இரவு 9:30 மணிக்கு, கரைக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. அதன் அடியில் சிக்கிய பாபு உயிரிழந்தார்.
தினேஷ் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.