Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 'மக்களுடன் முதல்வர்' முகாம் 1,356 மனு மீது விசாரணை

'மக்களுடன் முதல்வர்' முகாம் 1,356 மனு மீது விசாரணை

'மக்களுடன் முதல்வர்' முகாம் 1,356 மனு மீது விசாரணை

'மக்களுடன் முதல்வர்' முகாம் 1,356 மனு மீது விசாரணை

ADDED : ஜூலை 24, 2024 10:48 PM


Google News
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர் ' முகாம், நேற்று படாளம் ஊராட்சியில் துவங்கியது.

இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின்வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.

இதில், தணிக்கை உதவி இயக்குனர் பிரபாகர், மதுராந்தகம் வருவாய் வட்டாட்சியர் துரைராஜன், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

பொதுமக்களிடமிருந்து 1,356 மனுக்கள் வரப்பெற்றன. இதில், பூதுார், கீழவலம், பழையனுார், படாளம் எல்.என்.,புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமை தொகை கேட்டு, அதிகப்படியான மனுக்கள் வரப்பெற்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us