Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புதிய குடிநீர் தொட்டி பணி விதிமீறி கட்டப்படுகிறதா?

புதிய குடிநீர் தொட்டி பணி விதிமீறி கட்டப்படுகிறதா?

புதிய குடிநீர் தொட்டி பணி விதிமீறி கட்டப்படுகிறதா?

புதிய குடிநீர் தொட்டி பணி விதிமீறி கட்டப்படுகிறதா?

ADDED : ஜூலை 13, 2024 12:37 AM


Google News
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகில்உள்ள திருவிடந்தை ஊராட்சி பகுதியில், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, குடிநீர் வினியோகத்திற்காக, கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஊராட்சி நிர்வாகம், 27.25 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவில், குடிநீர் தொட்டி கட்ட முடிவெடுத்தது.

திருப்போரூர் ஒன்றியகுழு தலைவர் இதயவர்மன், நேற்று கட்டுமான பணியை பூமி பூஜையுடன் துவக்கினார்.ஊராட்சி தலைவர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சர்ச்சை


புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் முகப்பு பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறை ரங்கநாதர் குளத்தின் கரையில் கட்டப்படுகிறது.

தொல்லியல் துறை விதிமுறைகளின்படி, தொல்லியல் சின்னம் அருகே,எவ்வித கட்டுமானமும் கட்ட கூடாது என்பது விதி. இங்கு, குடிநீர் தொட்டி விதிமீறி கட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us