ADDED : ஜூன் 13, 2024 05:41 PM
படப்பை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் மதன்குமார், 35; ஸ்ரீபெரும்புதுார், மலைப்பட்டில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்.
படப்பை அருகே தங்கியிருந்த இவர், நேற்று முன்தினம், 'யமஹா எப்.இசட்' இருசக்கர வாகனத்தில், சாலமங்கலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது. பலத்த காயமடைந்த மதன்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மணிமங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.