/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம் விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்
விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்
விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்
விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்
ADDED : ஜூன் 28, 2024 01:58 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட விநாயகநல்லுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், புக்கத்துறை - வேடந்தாங்கல் மாநில நெடுஞ்சாலையில்நிழற்குடை அமைக்கப்பட்டது.
அது உரிய பராமரிப்பின்றி, கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, அபாயகரமான நிலையில் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக நிழற்குடை அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.