Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வண்டலுார் போலீஸ் அகாடமியில் புதிய டி.எஸ்.பி.,க்களுக்கு பயிற்சி

வண்டலுார் போலீஸ் அகாடமியில் புதிய டி.எஸ்.பி.,க்களுக்கு பயிற்சி

வண்டலுார் போலீஸ் அகாடமியில் புதிய டி.எஸ்.பி.,க்களுக்கு பயிற்சி

வண்டலுார் போலீஸ் அகாடமியில் புதிய டி.எஸ்.பி.,க்களுக்கு பயிற்சி

ADDED : ஜூலை 25, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி:வண்டலுாரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில், நேரடியாக நியமிக்கப்பட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர்களுக்கு, ஓராண்டு அடிப்படை பயிற்சிக்கான துவக்கவிழா, நேற்று முன்தினம் நடந்தது.

இதில், ஏழு பெண்கள் உள்ளிட்ட 22 போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள் பங்கேற்று, பயிற்சி பெற உள்ளனர்.

பயிற்சியின் துவக்க விழாவில், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பங்கேற்று, பயிற்சியை துவக்கி வைத்தார். போலீஸ் பயிற்சி நிலைய கூடுதல் பொறுப்பு இயக்குனர் சந்தீப்ராய் ரத்தோட், பயிற்சியகத்தில் உள்ள வசதிகள் மற்றும் புதிதாக துவங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில், சந்தீப்ராய் ரத்தோட் பேசியதாவது:

புதிதாக தேர்வாகி, துணை கண்காணிப்பாளர் களாக பயிற்சி பெறுவோருக்காக, நாவீன பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில், சட்டம், அறிவியல் சார்ந்த விசாரணை, நவீன கணினிமயமாக்கப்பட்ட கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை, சமூக காவல், தலைமை தகவல் தொடர்பு திறன், சைபர் கிரைம், விசாரணை மற்றும் செயல்பாடுகள் போன்றவை இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், சட்ட நுணுக்கங்களுடன் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள், வல்லுனர்களால், சட்ட வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அதனுடன், ஆயுதங்களை கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுனர் பயிற்சி உள்ளிட்டவையும், தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, 10 நாட்கள் சிறப்பு பயிற்சியாக அளிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, வனப்பகுதிகளில் வரைபட ஆய்வு முகாம், பாதுகாப்பு, வழிகாட்டும் முறை, மலை ஏறுதல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நேரடி களப்பயிற்சியும் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us