Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிராமப்புற ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுமா?

கிராமப்புற ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுமா?

கிராமப்புற ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுமா?

கிராமப்புற ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுமா?

ADDED : ஜூலை 12, 2024 10:09 PM


Google News
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில், முழுநேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்குகின்றனர்.

கிராமப்புற ரேஷன் கடைகளை பொறுத்தவரை, அரசு அறிவித்த நேரமான காலை 9:00 மணிக்கு திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து, வாயலுார் உய்யாலிகுப்பம் பகுதி வாசிகள் கூறியதாவது:

இங்குள்ள ரேஷன் கடை 11:30 மணிக்கு மேல் தான் திறக்கப்படுறது. இதனால், வேலைக்கு செல்வோர் பொருட்கள் வாங்க முடியவில்லை.

மேலும், எப்போது பொருட்கள் வழங்குகின்றனர் என்றும் தெரியவில்லை. கடையை குறித்த நேரத்தில் திறந்து, பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us