Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

ADDED : அக் 15, 2025 10:14 PM


Google News
புதுப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, அரசு பேருந்து கவிழ்ந்து, 40க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு, நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. 40க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்தனர். கல்பாக்கம் அடுத்த, மேல்பெருமாள்சேரி பகுதியில், இரவு 7:00 மணிக்கு கடந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க, பேருந்தின் ஓட்டுநர் வேகத்தை குறைத்து, சாலையின் இடதுபுறம் ஒதுங்கியுள்ளார்.

அப்போது சாலையோர மண் சரிவு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 40க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர். அப்பகுதியினர் மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us