ADDED : அக் 12, 2025 10:31 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்.,- 1 பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன், 23. இவர் மீது, மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜாமினில் வெளிவந்த சபரிநாதன், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவான நிலையில், போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சபரிநாதன் தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்ததை அறிந்த போலீசார், அவரை தாம்பரம் சானடோரியம் அப்பாவு தெருவில் வைத்து கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


