Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/அச்சிறுபாக்கம் கோவில் குளம் பாசி படர்ந்து வீணாகும் அவலம்

அச்சிறுபாக்கம் கோவில் குளம் பாசி படர்ந்து வீணாகும் அவலம்

அச்சிறுபாக்கம் கோவில் குளம் பாசி படர்ந்து வீணாகும் அவலம்

அச்சிறுபாக்கம் கோவில் குளம் பாசி படர்ந்து வீணாகும் அவலம்

ADDED : ஜன 31, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு ஊராட்சியில், கெங்கையம்மன் கோவில் குளம் முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது.

மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. தண்ணீரில் பாசி படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. குளக்கரையை சுற்றி புதர் மண்டி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கெங்கையம்மன் கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளதாக, இப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். குளத்தின் உள்பகுதியை சீரமைக்க வேண்டும்.

குளக்கரை பகுதிகளில் நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், கழிவுகளை அகற்றவும், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us