ADDED : செப் 23, 2025 10:40 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த காட்டுதேவாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் குண சேகர், 57; விவசாயி.
இவர், நேற்று காலை 6:30 மணியளவில், தனக்குச் சொந்தமான பசு ஒன்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். காட்டுதேவாத்துார் பேருந்து நிறுத்தம் அருகே, பசு சாலையைக் கடந்தது.
அப்போது, ஜல்லி ஏற்றிக் கொண்டு சித்தாமூரில் இருந்து செய்யூர் நோக்கி அதிவேகமாகச் சென்ற கல்குவாரி லாரி, பசுவின் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி, பசு உயிரிழந்தது.
சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.