/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை புறநகரில் உரம் தட்டுப்பாடு கூடுதல் விலையால் விவசாயிகள் அவதி செங்கை புறநகரில் உரம் தட்டுப்பாடு கூடுதல் விலையால் விவசாயிகள் அவதி
செங்கை புறநகரில் உரம் தட்டுப்பாடு கூடுதல் விலையால் விவசாயிகள் அவதி
செங்கை புறநகரில் உரம் தட்டுப்பாடு கூடுதல் விலையால் விவசாயிகள் அவதி
செங்கை புறநகரில் உரம் தட்டுப்பாடு கூடுதல் விலையால் விவசாயிகள் அவதி
ADDED : செப் 18, 2025 11:15 PM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்கலம், பாலுார், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், கருநிலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயம் பிரதான தொழில்.
தற்போது ஆடிப் பட்டத்தில் நெல் விதைப்பதை விட காய்கறி செடிகள், பூச்செடி போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிட, விவசாயிகள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
ஆடிப் பட்டத்தில் நெற்பயிரை தவிர்த்து காய்கறி, பூச்செடிகளை பயிரிட காரணம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஏரிகளில் போதிய தண்ணீர் இருக்காது.
அதன் காரணமாக 'பம்ப் செட்' வைத்துள்ள விவசாயிகள், குறுகிய காலங்களில் மகசூல் தரக்கூடிய புடலங்காய், பாகற்க்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், வெண்டை உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றன்.
திம்மாவரம், ஆத்துார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அடி உரமான 'பாக்டம்பாஸ்' மற்றும் யூரியா போன்ற உரங்கள், இந்த பகுதியில் உள்ள தனியார் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கிடைக்காததால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.