Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

ADDED : அக் 01, 2025 12:23 AM


Google News
செய்யூர்:செய்யூர் அருகே நெசப்பாக்கம் கிராமத்தில், பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நெசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி, 46; விவசாயி. இவரது மனைவி பிரேமா, 40. தம்பதி நேற்று காலை 9:00 மணியளவில், தங்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று, விவசாய வேலை செய்துள்ளனர்.

வேலை முடிந்து, 11:30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து, நகை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us