Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூரில் நாளை கிருத்திகை விழா

திருப்போரூரில் நாளை கிருத்திகை விழா

திருப்போரூரில் நாளை கிருத்திகை விழா

திருப்போரூரில் நாளை கிருத்திகை விழா

ADDED : மே 24, 2025 08:39 PM


Google News
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வைகாசி கிருத்திகை நாளை நடைபெறுகிறது.

திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மாதந்தோறும், கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வகையில் நாளை, வைகாசி மாத கிருத்திகை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, நாளை அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படுகிறது.

அமாவாசை நாளுடனும் கிருத்திகை வருவதால், சுவாமியை தரிசிக்க ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று இரவு பரணி உற்சவத்தில், கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்ளுக்கு அருள்பாலிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us