Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதி

 பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதி

 பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதி

 பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதி

ADDED : டிச 04, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டிய பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சியில் நத்தம், வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. சாலையின் மையப்பகுதிகளில், குழாயை இணைக்கும் தொட்டிகள் அமைக்க, பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில், பள்ளங்களில் தொட்டிகள் மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் நடைபெறும் பகுதிகளில், முறையாக பள்ளங்களை மூடாததால், சாலைகளில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால், இவ்வழியாக செல்வோர் பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, விபத்துகளில் சிக்கி படுகாயமடைகின்றனர்.

இந்த பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், பள்ளங்களை முறையாக சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரி ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us