Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

ADDED : மே 27, 2025 07:51 PM


Google News
மாம்பாக்கம்:மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில், நாளை காலை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மாம்பாக்கம் உள்ளிட்ட எட்டு இடங்களில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படும் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின் வினியோக கழகம், மறைமலை நகர் கோட்டம், செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் கோட்டம், மாம்பாக்கம் 110/33-11 கே.வி.துணை மின் நிலையத்தில், நாளை காலை, மாதாந்திர அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், மாம்பாக்கம் ஒரு பகுதி, கொளத்துார், கண்ணாபுரம், கீழ்கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை, வெம்பாக்கம் மற்றும் ரத்தினமங்கலம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us