Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேல்வசலை மலையடிவார சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

மேல்வசலை மலையடிவார சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

மேல்வசலை மலையடிவார சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

மேல்வசலை மலையடிவார சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

ADDED : மே 17, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த மேல்வசலை கிராமத்தில், நீர்பெயர் - வேட்டூர் செல்லும் 8 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையை மேல்வசலை, கீழ்வசலை, நீர்பெயர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில், மேல்வசலை கிராமத்திலுள்ள மலையடிவார பகுதியில், அபாயகரமான வளைவு உள்ளது.

இவ்விடத்தில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

கட்டுப்பாட்டை இழக்கும் சில வாகனங்கள், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது.

இந்த வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை நடவடிக்கை இல்லாததால், அதிருப்தியில் உள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சாலை வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us