/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி
கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி
கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி
கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி
ADDED : அக் 15, 2025 10:13 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ம் தேதி, திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 'தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட, கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகளில் உணவு, தங்குமிடவசதி, சீருடைகள், பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த இலவச பயிற்சிக்குப் பின், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
விருப்பமுள்ள இளைஞர்கள் வரும் 18ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை, செங்கல்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெறும், இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற்கலாம்.
மேலும் விபரம் பெற அச்சிறுபாக்கம் - 95665 05051, மதுராந்தகம் - 96266 34105, சித்தாமூர் - 87782 40051, லத்துார் - 99768 60716, திருக்கழுக்குன்றம் - 98944 96522, திருப்போரூர் - 98425 34416, காட்டாங்கொளத்துார் - 82486 74283, புனிததோமையார்மலை - 96775 41910 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


