Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போனில் பேசிக்கொண்டிருந்த மாணவர் மின்னல் தாக்கி பலி

போனில் பேசிக்கொண்டிருந்த மாணவர் மின்னல் தாக்கி பலி

போனில் பேசிக்கொண்டிருந்த மாணவர் மின்னல் தாக்கி பலி

போனில் பேசிக்கொண்டிருந்த மாணவர் மின்னல் தாக்கி பலி

ADDED : அக் 06, 2025 11:37 PM


Google News
சென்னை, சென்னை, மேற்கு முகப்பேர், ஐந்தாவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர், எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று மாலை பாடி குப்பத்தில் உள்ள தன் நண்பர் தனுஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன், வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, முகுந்தன் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில், மொட்டை மாடி அருகில் இருந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிய துவங்கியது. அதேசமயம் முகுந்தனின் மொபைல் போன் வெடித்து, சம்பவ இடத்திலேயே முகுந்தனும் உடல் கருகி பலியானார்.

தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us