Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குரங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

குரங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

குரங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

குரங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

ADDED : அக் 21, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
சித்தாமூர்: நுகும்பல் காட்டுப் பகுதியில் மதுராந்தகம் - -வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென, விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 37 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது.

சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல, இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

தினமும் சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து எ ன ஏராளமான வாகன ங்கள் கடந்து செல்கின்றன.

நுகும்பல் காட்டுப்பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உணவு தேடி, குரங்குகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், புதிதாக சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், குரங்கள் உலா வரு வது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தில் குரங்குகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு காயங்கள் ஏற்படுகின்றன.

எனவே, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து, குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us