Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஊராட்சி கட்டடத்தில் நீர்க்கசிவு ஆவணங்கள் பாதுகாப்பதில் சிக்கல்

ஊராட்சி கட்டடத்தில் நீர்க்கசிவு ஆவணங்கள் பாதுகாப்பதில் சிக்கல்

ஊராட்சி கட்டடத்தில் நீர்க்கசிவு ஆவணங்கள் பாதுகாப்பதில் சிக்கல்

ஊராட்சி கட்டடத்தில் நீர்க்கசிவு ஆவணங்கள் பாதுகாப்பதில் சிக்கல்

ADDED : மே 25, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்,:மொறப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில், மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால், ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மொறப்பாக்கம் ஊராட்சியில், அஞ்சல் அலுவலகம் அருகே, 2016-17ம் ஆண்டில், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக, இந்த அலுவலகத்தின் உள்பகுதியில், நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

அதனால், மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஆவணங்கள், பதிவேடுகள், கணினி ஆகியவற்றை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.

எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி மன்ற கட்டடத்தை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us