Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாக்கம் மீன் விற்பனை நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

பாக்கம் மீன் விற்பனை நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

பாக்கம் மீன் விற்பனை நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

பாக்கம் மீன் விற்பனை நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

ADDED : செப் 30, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில், பயன்பாடின்றி உள்ள மீன் விற்பனை நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில், 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், அச்சிறுபாக்கம் பாசனப் பிரிவுக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியில், ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.அதனால், ஏரி ஏலம் விடப்பட்டு, மீன் வளர்ப்பு நடந்து வருகிறது.

அதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே, அரசு சார்பில் மீன் விற்பனை நிலையம் கட்டப்பட்டது.ஆனால், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, மீன் விற்பனை நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us