Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

ADDED : அக் 15, 2025 10:17 PM


Google News
திருப்போரூர்: பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி, சாத்தங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. 30, இவர், அதே பகுதி தனியார் பல் மருத்துவ மனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு சாப்பிட வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, வாலிபர் ஒருவர் ஷர்மிளாவை பின் தொடர்ந்து வந்து, அவர் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறிக்க முயன்றார்.

அப்போது, அவர் கூச்சலிட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து வாலிபரை பிடித்து கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருப்போரூர் பகுதியை சேர்ந்த உதயகுமார், 36 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us