/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார் சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்
சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்
சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்
சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்
ADDED : ஜூலை 25, 2024 12:57 AM

சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, இ.சி.ஆர்., நீலாங்கரையில் நேற்று நடந்தது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, 2,000 பேருக்கு பட்டா வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதே தாலுகாவில், பட்டா கிடைக்காத தகுதியுள்ள பயனாளிகளுக்கு, விரைவில் பட்டா வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை, வருவாய்த் துறை வாயிலாக எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு உதயநிதிபேசினார்.