Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடமாநில நபர்களிடம் மொபைல்போன் பறிப்பு

வடமாநில நபர்களிடம் மொபைல்போன் பறிப்பு

வடமாநில நபர்களிடம் மொபைல்போன் பறிப்பு

வடமாநில நபர்களிடம் மொபைல்போன் பறிப்பு

ADDED : ஜூலை 15, 2024 12:54 AM


Google News
செங்குன்றம்,:செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கத்தில் உள்ள தனியார்,'பர்னிச்சர்' குடோனில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புனித், 20, மற்றும் அருண், 22, ஆகியோர் பணிபுரிகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, இருவரும் விளாங்காடுபாக்கம், தர்காஸ் கிராமம் வழியாக நடந்து சென்றனர்.

அப்போது 'பைக்'கில் முகக்கவசம் அணிந்து வந்த நான்கு பேர், அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, விலை உயர்ந்த 2 மொபைல் போன்களை பறித்துச் சென்றனர்.

புகாரின்படி, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us