Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உணவு பங்கிடுவதில் தகராறு வடபழனி நண்பர் கொலை

உணவு பங்கிடுவதில் தகராறு வடபழனி நண்பர் கொலை

உணவு பங்கிடுவதில் தகராறு வடபழனி நண்பர் கொலை

உணவு பங்கிடுவதில் தகராறு வடபழனி நண்பர் கொலை

ADDED : மார் 13, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
வடபழனி, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில், சாலையோரத்தில் வசித்தவர் தாஜ் உசேன், 25; பழைய பேப்பர்களை வீடுகளில் சேகரித்து விற்பவர்.

அதே பகுதி காயலான் கடையில், கடந்த 8ம் தேதி படுத்திருந்தார். இவரை பார்க்க, அவரது நண்பர் சாதிக் அலி, 45, வந்துள்ளார். இவரும், பழைய பேப்பர்களை சேகரித்து விற்பவர்.

இருவரும் மது போதையில் இருந்த நிலையில், சாதிக் அலி வைத்திருந்த உணவை, தாஜ்உசேன் சாப்பிட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சாதிக்அலி தள்ளியதில் கீழே விழுந்த தாஜ் உசேன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தோர், தாஜ்உசேனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாஜ்உசேன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலை முயற்சி வழக்காக பதிவு செய்த போலீசார், கொலை வழக்கமாக மாற்றி, சாதிக் அலியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us