Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாலியல் தொழில் நடத்திய பெண் கைது

பாலியல் தொழில் நடத்திய பெண் கைது

பாலியல் தொழில் நடத்திய பெண் கைது

பாலியல் தொழில் நடத்திய பெண் கைது

ADDED : ஜூலை 02, 2024 01:22 AM


Google News
பெரம்பூர், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில், பெதர் டச் ஸ்பா மற்றும் சலுான் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக, செம்பியம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட சென்டரில் போலீசார் திடீரென நுழைந்து, சோதனை நடத்தினர்.

அங்கு கோல்கட்டா மாநிலத்தைச் சேர்ந்தவர் உட்பட, இரு பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.

இதையடுத்து, அந்த சென்டரை நடத்திய ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷமீம் பேகம்,33, என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அங்கு சிக்கியிருந்த இரு பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us