Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 206 பேர் மனு

குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 206 பேர் மனு

குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 206 பேர் மனு

குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 206 பேர் மனு

ADDED : அக் 08, 2025 02:59 AM


Google News
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, 206 பேரிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் அருண், அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.

பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இம்முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திரபிதாரி, துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us