Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்

ADDED : அக் 20, 2025 04:43 AM


Google News
சென்னை: சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி வீடு, பா.ம.க., தலைமை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களுக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை, இ - மெயில் ஒன்று வந்தது.

அதில், போயஸ்கார்டனில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் வீடு, தி.நகரில் உள்ள பா.ம.க., தலைமை அலுவலகம், அன்புமணி வீடு, அண்ணாசாலை தர்கா ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர் கள் மோப்பநாய் உதவியுடன், அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற் கொண்டனர்.

வெடிப்பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் முகவரியை பயன்படுத்தி, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us