Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ADDED : அக் 15, 2025 02:20 AM


Google News
மூவரசம்பட்டு,

நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியை சேர்ந்தவர் மணவாளன், 67. கொத்தனார். இவர், கடந்த 10ம் தேதி, கட்டுமானப் பணிக்காக மூவரசம்பட்டு பிரதான சாலை, பரங்கிமலை- - மேடவாக்கம் சந்திப்பை கடக்க முயன்றார்.

அப்போது, மூவரசம்பட்டு, பஜ னை கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல், 52, என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மணவாளன் மீது மோதியது. இதில், தலையில் காயமடைந்த அவர், நங்கநல்லுாரில் உள் ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, அவர் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us