Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

 மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

 மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

 மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

ADDED : டிச 01, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
ஆவடி: கீழ்ப்பாக்கம், தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் எபினேசர், 53; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், நேற்று மதியம் 'மாருதி ஸ்விப்ட்' காரில் அம்பத்துாரில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருமுல்லைவாயில், வைஷ்ணவி கோவில் அருகே வளைவில் திரும்பும்போது, துாக்க கலக்கத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில், கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பகுதி மக்கள் அவரை மீட்டனர். காரில் 'ஏர் பேக்' இருந்ததால், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஜேக்கப் எபினேசர் உயிர் தப்பினார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு விபத்து தி ருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் வெங்கடராமன், 35. இவர், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே தாய், மனைவி, குழந்தையுடன் நேற்று காலை காரில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us