Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேம்பாலத்தில் துாங்கியவர் மீது ஏறி இறங்கிய கார்

மேம்பாலத்தில் துாங்கியவர் மீது ஏறி இறங்கிய கார்

மேம்பாலத்தில் துாங்கியவர் மீது ஏறி இறங்கிய கார்

மேம்பாலத்தில் துாங்கியவர் மீது ஏறி இறங்கிய கார்

ADDED : ஜூலை 05, 2025 12:48 AM


Google News
தாம்பரம், மேம்பாலத்தில், போதையில் துாங்கியவர் மீது கார் ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

தாம்பரம் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடியைச் சேர்ந்த ரமணா, 63, என்பவர், சாலையோரம் படுத்து துாங்கியுள்ளார். அவர் அருகே 'மாருதி ஸ்விப்ட்' கால்டாக்சி கார் ஒன்று நின்றிருந்தது.

இதையறியாமல், ஓட்டுநர் காரை எடுத்தபோது, ரமணா மீது ஏறி இறங்கியது. இதில் காயமடைந்தவரை, போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுனரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியிடம் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us