/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
ADDED : செப் 19, 2025 12:26 AM
சென்னை, : சென்னையில் இருந்து உள், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள், நேற்று தாமதமாக புறப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாவதும், காரணமின்றி ரத்து செய்யப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால், விமான நிலையம் வந்து, பயணியர் அவதியடைவதும் தொடர்கிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, துபாய் செல்லும் விமானங்கள், நேற்று அதிகாலை முதல் ஒரு மணி நேரம் தாமத மாக புறப்பட்டு சென்றன.
அதேபோல் உள்நாட்டு நகரங்களான புனே, ஹைதராபாத், துாத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், மூன்று மணி நேரம் தாமதாக புறப்பட்டு சென்றன.
வட மாநிலங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து இங்கு வர வேண்டிய விமானங்களி ன் சேவையும் பாதிக்கப் பட்டதாக, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில வாரங்களாக 'டி2' புறப்பாடு முனையத்தில் சோதனைகளை முடிக்க நீண்ட நேரம் ஆவதே இந்த சிக்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது.