Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ ரூ.பல லட்சம் பொருட்கள் நாசம்

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ ரூ.பல லட்சம் பொருட்கள் நாசம்

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ ரூ.பல லட்சம் பொருட்கள் நாசம்

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ ரூ.பல லட்சம் பொருட்கள் நாசம்

ADDED : செப் 30, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:மறைமலை நகர் 'சிப்காட்' பகுதியில், பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

மறைமலை நகர் சிப்காட் பகுதியில், பெரிய அளவிலான பாலித்தீன் பைகள் தயாரிக்கும், 'பென்ஸ் பேக்கேஜிங் சொல்யூஷன்ஸ்' எனும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 40க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர், மோட்டார் 'சுவிட்சை' போட்டபோது, எதிர்பாராத விதமாக தீப்பற்றி உள்ளது. மளமளவென பரவிய தீ, தொழிற்சாலை முழுதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, சிறுசேரி செங்கல்பட்டில் இருந்து ஐந்து வாகனங்களில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.

அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால், மறைமலை நகர் பகுதியில் மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. விபத்து குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us