ADDED : மார் 16, 2025 12:10 AM
எம்.கே.பி., நகர், முல்லை நகர் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, எம்.கே.பி., நகர் போலீசாருக்கு, நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வியாசர்பாடி, பி.வி.காலனி, 30வது தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேந்திரன், 60 என்பவரை கைது செய்தனர்
அவரிடம் இருந்து, கத்தி மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


