Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு இடிந்து பாட்டி, பேரன் காயம்

வீடு இடிந்து பாட்டி, பேரன் காயம்

வீடு இடிந்து பாட்டி, பேரன் காயம்

வீடு இடிந்து பாட்டி, பேரன் காயம்

ADDED : அக் 23, 2025 12:47 AM


Google News
திருவொற்றியூர்: திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் தேசராணி, 73. இவருடைய பேரன், தட்சிணாமூர்த்தி, 19; மீன் வியாபாரி. நேற்று அதிகாலை, பாட்டியும், பேரனும் தங்களது ஓடு வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, ஓடுகள் மற்றும் கூரை ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், பாட்டி - பேரன், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us