Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

ADDED : அக் 01, 2025 02:53 PM


Google News
சென்னை:

திருவள்ளூர் மாவட்டத்தில், ஐந்து வெவ்வேறு திட்டப்பகுதிகளில், 132 வணிக மனைகளை இ - ஏலம் வாயிலாக விற்கும் பணிகளை, வீட்டு வசதி வாரியம் துவக்கி உள்ளது.

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் மனைப்பிரிவு திட்டங்களில் வணிகம், பள்ளிக்கூடம், வழிபாட்டு இடம் போன்ற தலைப்பு களில் நிலம் ஒதுக்கப் பட்டன.

இந்நிலங்களை அதற்குரிய அரசு துறைகள் பெறவில்லை. இதனால், இந்த மனைகள் நிலுவையில் உள்ளன.

இது போன்ற நிலுவையில் உள்ள வணிக மனைகளை விற்பதற்காக, வாரியம் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வருகிறது. பொது ஏல முறையில் விற்க, ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இது குறித்து, வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர், 67; காக்களூர், 45; பெருமாள்பேட்டை - ஒன்பது; செவ்வாய்பேட்டை - ஏழு; பெரிய குப்பம் - நான்கு என மொத்தம், 132 வணிக மனைகள் விற்பனைக்கு உள்ளன.

இந்த மனைகளை இ - ஏலம் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதில் பங்கேற்க விரும்புவோர், அக்., 23க்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us