Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

ADDED : மார் 21, 2025 12:11 AM


Google News
பெரம்பூர், பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் கஜலட்சுமி, 23. இவருக்கும், அஜய்குமார், 27, என்பவருக்கும், கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த கஜலட்சுமி, சில மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி, மாமியார் வீட்டில் இல்லாத போது, அவரது வீட்டுக்கு சென்ற அஜய்குமார், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது, அஜய்குமார் தாக்கியதில், கஜலட்சுமிக்கு வலது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஜலட்சுமிக்கு, மூன்று தையல் போடப்பட்டது.

அதன்பின், அவர் அளித்த புகாரின்படி, அஜய்குமாரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us