Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாமரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாமரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாமரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாமரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்

ADDED : ஜூன் 21, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
எண்ணுார், திருவொற்றியூர் மண்டலம் எண்ணுாரில் 5.32 ஏக்கர் பரப்பளவில் இருந்தது தாமரை குளம். ஆக்கிரமிப்பால் இரண்டு ஏக்கராக சுருங்கியது. இது குறித்து, செல்வராஜ்குமார் என்பவர் தொடுத்து வழக்கை தொடர்ந்து 52 ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதன்படி, மூன்று கட்டமாக 22 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், நான்காவது கட்டமாக மண்டல உதவி கமிஷனர் விஜய்பாபு தலைமையில், நேற்று பொக்லைன் இயந்திரங்களை கொண்டு, நான்கு மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, எண்ணுார் போலீஸ் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us