/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
ADDED : அக் 23, 2025 12:42 AM

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடபழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. இரவு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று முதல் வரும் 26ம் தேதி வரை, காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் இரவும் முறையோ சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.
வரும், 27ம் தேதி காலை 6:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சூரசம்ஹார உத்சவம் நடக்கிறது.
பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம், மயில் வாகன புறப்பாடு நடக்கிறது.
திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் நவ., 1 வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.


