/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெளிநாட்டு மது வகை பதுக்கி விற்றவர் கைது வெளிநாட்டு மது வகை பதுக்கி விற்றவர் கைது
வெளிநாட்டு மது வகை பதுக்கி விற்றவர் கைது
வெளிநாட்டு மது வகை பதுக்கி விற்றவர் கைது
வெளிநாட்டு மது வகை பதுக்கி விற்றவர் கைது
ADDED : மார் 21, 2025 12:20 AM
சென்னை, மண்ணடியில் உள்ள தங்கும் விடுதியில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக, பூக்கடை அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த விடுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பெரியமேடை சேர்ந்த திலீப்குமார், 25 என்பவர், சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, ஒன்பது வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.